Bei einem Denkmal handelt es sich um ein Objekt mit besonder
Read Moreகாற்று அசைத்திடும் நெருப்பில்
பானையில் போட்டு வைத்த அரிசியோடு
பொங்கி வருவது நுரை அல்ல
எம்முள் ஊற வைத்த சுதந்திர தாகம்
கதிரவன் செக்க சிவந்த நிறத்தொடு
காலையில் பிறந்து
இரவில் மறையும் வரைக்கும்
எத்தனை நாடகம் மண்ணில்
உழவன் ஏர் எடுத்து மென்மையோடு
மண்ணில் பதித்து அன்னை மண் காயப்படாமல்
உழுது
உழவன் வியர்வை மண்ணில் விதைக்க
நெல் மணி பரிசாக கொடுக்கும் கதிரவா
வணக்கம்
உமக்கு நன்றி சொல்லும் இவ்வேளையில்
நாமும் உம்மைப் போலவே
சுதந்திரமாக
வாழ விரும்புகின்றோம்
பிறந்துள்ள புதிய ஆண்டில்
இன்றைய பொங்கல்
அடக்குமுறைகளிற்கு எதிராகவும்,
ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்காகவும்,
சுதந்திரத்திற்காகவும்
பொங்கட்டும்
அனைத்து உறவுகளுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி இனிய தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
Leave a Reply